கவிதை:
பெ.நிர்மலா, இணைப்பேராசியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி. சென்னை.
பூத்துக் குலுங்கிக்
கூடுகளுக்கு இடமளித்த மரம்
தன் வேர்களிலிருந்தே விலக்கப்படும் காலம்
செல்லமாகச் சிணுங்க வைத்து
வருடிக் கொடுத்த காற்று
உன் பருத்த கிளைகளிலே
மோதி மோதி
உடைப்பட்டுப் போகும்
எனது கொள்கைகளுக்காக நீயும்
உனது கொள்கைகளுக்காக நானும்
மணம் முடித்துக்கொண்டோம்
நமது கொள்கைகள்
துகிலுரித்துக் கொண்டன
சேர்ந்தவை உடல்கள் மட்டுமே.
உன் வாழ்க்கையின்
முன் பக்கங்களைப் புரட்ட
மனமில்லைதான்
என்றாலும்... அடுத்து வந்த
பக்கங்களின் வெற்றிடங்களால்
முன்னோக்கி நகர்த்தப்பட்ட கை
ஏற்றியது மனத்தில் பாரத்தை...
புதை குழியாய் நினைவுகள்
அழுந்தி மூழ்கியது நான் மட்டும்.
வெறுப்பைக்கூடக்
கரிசனம் காட்டும் வெளிப்படுத்தும்
உன்னிடம்... அன்பைக்கூட
நீ வெறுக்கும் வண்ணம்தான்
வெளிப்படுத்த முடிகிறது.
பெ.நிர்மலா, இணைப்பேராசியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி. சென்னை.
பூத்துக் குலுங்கிக்
கூடுகளுக்கு இடமளித்த மரம்
தன் வேர்களிலிருந்தே விலக்கப்படும் காலம்
செல்லமாகச் சிணுங்க வைத்து
வருடிக் கொடுத்த காற்று
உன் பருத்த கிளைகளிலே
மோதி மோதி
உடைப்பட்டுப் போகும்
எனது கொள்கைகளுக்காக நீயும்
உனது கொள்கைகளுக்காக நானும்
மணம் முடித்துக்கொண்டோம்
நமது கொள்கைகள்
துகிலுரித்துக் கொண்டன
சேர்ந்தவை உடல்கள் மட்டுமே.
உன் வாழ்க்கையின்
முன் பக்கங்களைப் புரட்ட
மனமில்லைதான்
என்றாலும்... அடுத்து வந்த
பக்கங்களின் வெற்றிடங்களால்
முன்னோக்கி நகர்த்தப்பட்ட கை
ஏற்றியது மனத்தில் பாரத்தை...
புதை குழியாய் நினைவுகள்
அழுந்தி மூழ்கியது நான் மட்டும்.
வெறுப்பைக்கூடக்
கரிசனம் காட்டும் வெளிப்படுத்தும்
உன்னிடம்... அன்பைக்கூட
நீ வெறுக்கும் வண்ணம்தான்
வெளிப்படுத்த முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக