கவிதை:
-பாவலன், பூதூர், மதுராந்தகம்.
இயற்கை சூழ்ந்த
அழகு பூங்காதான்
கவிதைக்கான கருவறை
பூக்களோடும் மரங்களோடும்
குயில்களோடும் பறவைகளோடும்
பேசிப் பேசி எப்படியாவது
ஒரு கவிதை முடித்துவிட வேண்டும்
காத்து நின்றேன்
அப்பொழுதெல்லாம்
ஒவ்வொரு கவிதையும்
முதல் காதல் நினைவைப் போன்று
வாய்த்தது
இன்னும் சில கவிதைகள்
அவளுக்காகவும் படைத்திருந்தேன்
அப்படித்தான்
நான்…
கவிதைக்காகத்தான் வந்திருக்கக் கூடும்
ஒரு போதும் எனக்காக அல்ல…
மண்வெட்டி
கத்தி
கடப்பாறை
கோடாறி காம்பு
கோணி ஊசி
செய்வதுதான்
உண்மையான கவிதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக