கவிதை:
-க.அமரேசன், மேல்மா, வந்தவாசி.
மலையின் மரமொன்றில்
தேனும் தினைமாவும்
சரிபாதி கலந்துண்டு...
சுனை நீராடி
பூக்கள் தொடுத்து
விளையாடி
வேட்டையாடி
வீரம் காட்டி...
மழையில் புணர்ந்து
குளிரில் விரைத்து
வெயிலில் காய்ந்து
மாலை பொழுதில் மனம் மகிழ்ந்து...
கடற்கரை பரப்பில் காலாற்றி
மலரின் மகரந்தமும்
புலால் நாற்றமும் வீசி
சுரம் வழி கடந்து...
மரத்தின் தேன் துளி
விழுந்தது!
லேபில் ஒட்டிய
டப்பாக்குள்…
-க.அமரேசன், மேல்மா, வந்தவாசி.
மலையின் மரமொன்றில்
தேனும் தினைமாவும்
சரிபாதி கலந்துண்டு...
சுனை நீராடி
பூக்கள் தொடுத்து
விளையாடி
வேட்டையாடி
வீரம் காட்டி...
மழையில் புணர்ந்து
குளிரில் விரைத்து
வெயிலில் காய்ந்து
மாலை பொழுதில் மனம் மகிழ்ந்து...
கடற்கரை பரப்பில் காலாற்றி
மலரின் மகரந்தமும்
புலால் நாற்றமும் வீசி
சுரம் வழி கடந்து...
மரத்தின் தேன் துளி
விழுந்தது!
லேபில் ஒட்டிய
டப்பாக்குள்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக